ஆன்மிக வேள்வி அறக்கட்டளை சார்பில், ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்வு நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
நாமக்கல் திருச்செங்கோடு சாலை சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், எது பக்தி? என்ற தலைப்பில் சென்னையைச் சேர்ந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. மணிகண்டன் பங்கேற்றுப் பேசுகிறார்.
மேலும் விவரங்களுக்கு 98424-69699, 94425-69699 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் அரசு பரமேஸ்வரன் தெரிவித்தார்.