ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஊழலைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பூங்கா சாலையில் கிழக்கு, மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்
கே.எம். ஷேக் நவீத் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சுப. சோமு, நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் தனகோபால், முன்னாள் மாவட்ட தலைவர் பாச்சல் சீனிவாசன், சுப்பிரமணியம், நாமக்கல் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பப்
பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கிழக்கு விநாயகமூர்த்தி, மேற்கு சதீஷ்குமார், நகர காங்கிரஸ் துணைத் தலைவர் குப்புசாமி, வட்டாரத் தலைவர்கள் இளங்கோ, குப்புசாமி, முரளி, ரங்கசாமி, நடராஜன், பேரூர் தலைவர்கள் சிங்காரம், இளங்கோ, ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ரபேல் போர் விமான கொள்முதல் ஊழல் குறித்து மனு அளிக்கப்பட்டது.