தூய்மைக்கான சேவை இயக்கப் பணி

பாரதீய ஜனதா கட்சியின் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியின் சார்பாக தூய்மைக்கான சேவை இயக்கப் பணி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்

பாரதீய ஜனதா கட்சியின் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியின் சார்பாக தூய்மைக்கான சேவை இயக்கப் பணி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்டம்பர்-15-ல் தூய்மைக்கான சேவை பணி இயக்கம் தொடங்கியது.
தூய்மைக்கான சேவை இயக்கம் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் பாஜக திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியின் சார்பாக அரசு மருத்துவமனையில் பாஜக திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மற்றும் அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்களுடன் உடன் இணைந்து தூய்மைப் பணிகள் நடைபெற்றன. மருத்துவமனை வளாகத்தில் இருந்த குப்பைகளை, கழிவுப் பொருள்களை அப்புறப்படுத்தினர். ஏராளமானோர் இப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com