குமாரபாளையத்தில் போலீஸார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றியும், பாதுகாப்புடனும் வாக்களிக்கும் வகையில்,

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றியும், பாதுகாப்புடனும் வாக்களிக்கும் வகையில், போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் குமாரபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
மக்களவைத் தேர்தல் ஏப்.18-ஆம் தேதி நடைபெறும் நிலையில், இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில், வாக்காளர்கள் அச்சமின்றியும், பாதுகாப்புடனும் சென்று வாக்கை செலுத்தும் வகையில் குமாரபாளையம் நகரின் முக்கிய வீதிகளில் போலீஸாரின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
இதனை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடக்கி வைத்தார். 
காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் எஸ்.சண்முகம் (திருச்செங்கோடு), பழனிச்சாமி (பரமத்தி வேலூர்), காவல் ஆய்வாளர் தேவி உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com