பரமத்தி வேலூரை அடுத்துள்ள வெங்கரையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காளியப்பன் பேரணியாக சென்று இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
பரமத்தி வேலூர் வட்டம், வெங்கரையில் நாமக்கல் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து நாமக்கல் மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலர் விஜயகுமார் தலைமையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று வெங்கரை பேரூராட்சி பகுதியில் பொதுமக்களிடையே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வெங்கரை அக்ரஹாரம் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம், வெங்கரையின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வெங்கரையம்மன் கோயில் முன் நிறைவு பெற்றது. இதில் வெங்கரை பேரூர் கழகச் செயலர் ரவீந்திரன், வெங்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் நித்தியகுமாரி மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.