நாமக்கல் அருகே குடும்ப பிரச்னை காரணமாக ரயில் முன் பாய்ந்து தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனர்.
நாமக்கல் அருகேயுள்ள பரளி ஊராட்சிக்குள்பட்ட ஒத்தையூரைச் சேர்ந்தவர் கண்ணையன்
( 42). இவரது மனைவி கண்ணகி (38). இவர்களுக்கு சிவக்குமார் (21) என்ற மகனும், பேபி (20), அகல்யா (16) என்ற இரு மகள்களும் உண்டு. இதில், சிவக்குமார், பேபி ஆகியோருக்கு திருமணமாகி விட்டது. அகல்யா வளையப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 - ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை ஊரில் நடைபெற்ற திருவிழாவின்போது, கண்ணையன், கண்ணகி இடையே குடும்பப் பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையில் இருந்த கண்ணகியும், அகல்யாவும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நெய்க்காரன்பட்டிக்குச் சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.