உலக மக்கள் நன்மை பெறவும், வறட்சி நீங்கி, இயற்கை செழிக்கவும் வேண்டியும், குமாரபாளையத்தில் 108 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் நடைபெற்ற வழிபாட்டுக்கு, சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பாரதி முரளீதர சுவாமிகள், ஸ்ரீதரன், மீனாட்சி ராஜா, மாநில ஒருங்கிணைப்பாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நகரத் தலைவர் சாம்பசிவ சிவாச்சாரியார், நிர்வாகிகள் லட்சுமி, ருக்மணி தேவி, மோகனா, அருணா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.