நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மாரப்பன்நாய்க்கன்பட்டி, நருவலூர், சிங்கிலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.85.84 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் மு.ஆசியா மரியம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.செல்வராஜ், பிஅருணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.