சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதைப் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மு.ஆசியா மரியம் அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதைப் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மு.ஆசியா மரியம் அழைப்பு விடுத்துள்ளார்.
 இது குறித்து அவர் செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும், சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இவ் விருதினைப் பெறுவோருக்கு, ரூ.1 லட்சம் விருதுத் தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. நிகழாண்டில் தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்குரிய நபர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
 சமூக நீதிக்காகப் பாடுபட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுய விவரம் மற்றும் முழு முகவரியுடன் அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் விணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com