குமாரபாளையம் பாண்டுரங்கர் கோயிலில் கோகுலாஷ்டமி விழா

குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோயிலில் கோகுலாஷ்டமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோயிலில் கோகுலாஷ்டமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
விழாவை முன்னிட்டு பாண்டுரங்கருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார வழிபாடுகள் நடத்தப்பட்டன.  இதையடுத்து, கோகுல கிருஷ்ணன் கொலு வைக்கப்பட்டு சிறப்பு பஜனை நடைபெற்றது.  இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர். 
இதேபோன்று,  தட்டாங்குட்டை ஜெய்ஹிந்த் நகர் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் புருஷோத்தமப் பெருமாள் கோயில், அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோயில், திருவள்ளுவர் நகர் செளந்தரராஜப் பெருமாள் கோயில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com