கொல்லிமலையில் பல்துறை இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.25) நடைபெறுகிறது. இதனையடுத்து, இருதயப் பரிசோதனை, கண் பரிசோதனை, பல் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, ரத்தப் பரிசோதனை போன்றவை இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. ராசிபுரம் ரோட்டரி சங்கம், இன்னர்வீல் சங்கம், ராசிபுரம் எஜூகேஷனல் சிட்டி ரோட்டரி சங்கம், நாமக்கல் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சென்னை சூர்யா மருத்துவமனை, சேலம், சுதாகர் இஎன்டி மருத்துவமனை உள்ளிட்டவை இணைந்து இதனை நடத்துகின்றன. கொல்லிமலை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் பகல் 2 மணிவரை நடைபெறும் முகாமில், அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், அழைத்துச் செல்லப்பட்டு, முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்படுவர்.