நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா

திருச்செங்கோடு மலை அடிவாரம் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு  முன்னாள் மாணவர்கள்,  பொதுமக்கள் கல்விச்சீர் வழங்கினர்.

திருச்செங்கோடு மலை அடிவாரம் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு  முன்னாள் மாணவர்கள்,  பொதுமக்கள் கல்விச்சீர் வழங்கினர்.
திருச்செங்கோடு ஆறுமுக சுவாமி கோயிலில் இருந்து கல்விச் சீரினை முன்னாள் மாணவர்களும் பொது மக்களும் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பள்ளிக்குத் தேவையான அலமாரிகள், நாற்காலிகள், தட்டுகள், பாடப் புத்தகங்கள்,நோட்டுப் புத்தகங்கள்,  எழுது பொருள்கள்  போன்ற ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை முக்கிய வீதிகள் வழியாக பாரம்பரிய சிலம்பு ஆட்டத்துடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்த முன்னாள் மாணவர்களும் பொதுமக்களும் பள்ளியை அடைந்தனர். பள்ளியில் தாங்கள் கொண்டு வந்த பொருள்களை தலைமையாசிரியரிடம் வழங்கினர். 
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com