பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள சீனிவாசப் பெருமாளுக்கு கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் கிருஷ்ண ஜயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதே போல், பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமன சுவாமி கோயிலில் உள்ள ருக்மணி, சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி, வேலூர் லஷ்மிநாராயண பெருமாள், பரமத்தி கோதண்டராமசாமி, பில்லூர் வீரவரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் கிருஷ்ண ஜயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.