பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க தீவிர வாகன சோதனை

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,  நாமக்கல் மாவட்ட நுழைவு வாயிலான பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே பரமத்தி வேலூர் போலீசார் தீவிர வாகனச் சோதனை நடத்தி

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,  நாமக்கல் மாவட்ட நுழைவு வாயிலான பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே பரமத்தி வேலூர் போலீசார் தீவிர வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர்.

இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியதாகக் கூறப்படும் 6 பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் தமிழக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின்படி,  பரமத்தி வேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பழனிச்சாமி அறிவுரையின் படி,  பரமத்தி வேலூர் மற்றும் ஜேடர்பாளையம் போலீசார் நாமக்கல் மாவட்ட நுழைவு வாயில் பகுதியான பரமத்தி வேலூர் காவிரி பாலம் மற்றும் சோழசிராமணி கதவணை ஆகிய பகுதிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதே போல்,  நாமக்கல் மாவட்டத்தின் நுழைவு வாயில் பகுதிகளிலும் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com