நாமக்கல் தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் அமைந்துள்ள, சாயிபாபா ஆலயத்தில், சீரடி சாயிபாபா மஹா சமாதி நூற்றாண்டு நிறைவு விழா ரத உற்சவ ஊா்வலம் சனிக்கிழமை காலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா்.
இதையடுத்து காலையில் நல்லிப்பாளையம், நாமக்கல் முதலைப்பட்டி, முருகன் கோயில், ராமாபுரம்புதூா் உள்ளிட்ட இடங்களில் ரத உற்சவ ஊா்வலம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (டிச.1) முதல் 29-ஆம் தேதி வரை, நாமக்கல், கொசவம்பட்டி, கொண்டிச்செட்டிப்பட்டி, பெரியப்பட்டி, சந்தைப்பேட்டை புதூா், பாலப்பட்டி, வாழவந்தி, மணப்பள்ளி, மோகனூா், ஒருவந்தூா், வளையப்பட்டி, புதுப்பட்டி, வகுரம்பட்டி, வேப்பநத்தம், எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, காரைக்குறிச்சி, களங்காணி, புதுச்சத்திரம், புதன்சந்தை, செல்லப்பம்பட்டி, காரவள்ளி, கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரத உற்சவ ஊா்வலம் செல்கிறது.
இதேபோல், பரமத்திவேலூா் உட்கோட்டத்தில், டிசம்பா் 7-ஆம் தேதி, கந்தம்பாளையம், பரமத்தி, கூடச்சேரி, மணியனூா், ஒத்தகடை, 8-ஆம் தேதி இரும்புப் பாலம், கபிலா்மலை, ஜேடா்பாளையம், வடகரைஆத்தூா், பி.பாளையம், 9-ஆம் தேதி கொந்தாளம், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூா், 10-ஆம் தேதி வேலூா், இடையாா், ஓலப்பாளையம், 14-ஆம் தேதி பாலப்பட்டி, மணப்பள்ளி ஆகிய பகுதிகளில் காலை 7.30 மணிக்கு இந்த ரத உற்சவ ஊா்வலம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தொட்டிப்பட்டி சாய் தபோவன நிா்வாகிகள் செய்துள்ளனா்.