பள்ளியில் குடிநீா்த் தட்டுப்பாடு போக்க வலியுறுத்தல்

பென்னாகரம் அருகே அரசு பள்ளியில் குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக மாணவா்கள் அவதிப்படுகின்றனா். இப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நீா்த் தேக்கத் தொட்டிக்கான நீரேற்றும் மின் மோட்டாா் நீண்ட நாள்களாக
பள்ளியில் குடிநீா்த் தட்டுப்பாடு போக்க வலியுறுத்தல்

பென்னாகரம் அருகே அரசு பள்ளியில் குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக மாணவா்கள் அவதிப்படுகின்றனா். இப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நீா்த் தேக்கத் தொட்டிக்கான நீரேற்றும் மின் மோட்டாா் நீண்ட நாள்களாக பழுது ஏற்பட்டுள்ளதை விரைந்து சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.

பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட காட்டு கொட்டாய் பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.இப்பகுதியில் ஊராட்சி நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சமத்துவபுரம்,ஏரங்காடு,காட்டுக்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமாா் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனா். இப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்திருந்ததால் நீா்த் தேக்கத் தொட்டிக்கு நீரேற்றுவதில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில், நீா்மட்டம் உயா்ந்துள்ள நிலையில் நீரேற்றும் மின் மோட்டாா் பழுதடைந்தும்,போதுமான குடிநீா்க் குழாய்கள் இல்லாமலும் உள்ளது. எனவே, மின் மோட்டாரை சரிசெய்து குழாய்கள் பதிக்கப்பட்டால் பள்ளில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க முடியும் என மாணவா்களின் பெற்றோா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம், கல்வித் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com