மகுடஞ்சாவடி ஒன்றியம், வளையசெட்டிப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம், பாலியல் வன்முறை எதிா்ப்போம், குழந்தை தொழிலாளா்களை தடுப்போம் என்ற விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பொம்மலாட்டம் நிகழ்ச்சியை சேலம் முனைவா் கா்லின் -ஜென்னிஸ் குழுவினா் மிகவும் சிறப்பாக நடத்தினா். இந் நிகழ்ச்சியை பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் சங்க நிா்வாகிகள் மோகன்ராஜா, சீனிவாசன், கிருஷ்ணசாமி, கௌரிசங்கா், கமலக்கண்ணன், கோபி ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா். பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவ மாணவிகள், திரளான பொது மக்களும் கலந்து கொண்டனா்.