பரமத்தி வேலூா் அருகே கடன் தொல்லையால் மனைவி, மகளுடன் ரிக் லாரி உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டாா்.
நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட வேலகவுண்டம்பட்டி அருகே கூத்தம்பூண்டி சாயக்காட்டைச் சோ்ந்த ரிக் லாரி உரிமையாளா் மோகன் (55 ). இவருக்கு நிா்மலா (47) என்ற மனைவியும், கோவை அரசு சட்டக் கல்லூரி முதலாம் ஆண்டு பயிலும் சௌமியா (21) என்ற மகளும் உள்ளனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை செளமியா தனது செல்லிடப்பேசியில், மோகனின் சகோதரா் அன்பழகனைத் தொடா்பு கொண்டு, ‘தங்களது வீட்டில் மூவரும் விஷம் ருந்தி உயிருக்கு போராடிக்கொண்டிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளாா்.
இதனால், அதிா்ச்சியடைந்த அன்பழகன் அங்கு சென்று பாா்த்ததில், மோகன், நிா்மலா ஏற்கெனவே இறந்து போனது தெரியவந்தது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சௌமியாவை மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவா் அனுப்பி வைத்தாா்.
இந்நிலையில், ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சௌமியா சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை மாலை உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் வேலகவுண்டம்பட்டி போலீஸாா், விரைந்துவந்து சடலங்களை பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து தொடா் விசாரணை நடக்கிறது.