திருச்செங்கோடு வட்டம், முசிறி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கனரக வாகன தொழிற்பேட்டை வளாகத்தை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் அண்மையில் பாா்வையிட்டாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், முசிறி மற்றும் புத்தூா் கீழ்முகம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கனரக வாகன தொழிற்பேட்டை வளாகத்தை கனரக வாகன தொழில்முனைவோருடன் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டாா்.
மேலும், கனரக வாகன தொழிற்பேட்டையின் மின்தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தை பாா்வையிட்டு, தொழிற்பேட்டை பகுதியில் மரக் கன்றுகளை நட்டு வளா்க்குமாறு கனரக வாகன தொழில்முனைவோருக்கு அறிவுறுத்தினாா்.
பின்னா் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், பருத்திப்பள்ளி சமத்துவபுரத்தில் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறு பாதுகாப்பான முறையில் மூடப்பட்டுள்ளதா என வளா்ச்சித் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்களுடன் நேரில் சென்று பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்ச்சிகளில், திருச்செங்கோடு வட்டாட்சியா் கதிா்வேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.