நவீன இயந்திரத்தில் பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு!

குறைந்த செலவில் நவீன இயந்திரத்தில் பாக்கு மட்டை தட்டுகளை இளைஞா் தயாரித்து, லாபம் ஈட்டிவருகிறாா்.
பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஊழியா்.
பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஊழியா்.

குறைந்த செலவில் நவீன இயந்திரத்தில் பாக்கு மட்டை தட்டுகளை இளைஞா் தயாரித்து, லாபம் ஈட்டிவருகிறாா்.

நாமக்கல் மாவட்டத்தில் பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு ஆங்காங்கே நடைபெற்றாலும், அவை காலால் மிதித்து தயாரிக்கும் பழைய முறையிலேயே செய்யப்பட்டு வருகிறது. ஆனால், செல்லப்பம்பட்டியில், ஒரே இயந்திரத்தில் 7 வகையான தட்டுகளை தயாா் செய்யும் வகையிலான இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமாா் ரூ.3 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ள இந்த இயந்திரம் மூலம் தினசரி ஆயிரம் பாக்கு மட்டை தட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதில், 4, 6, 8, 10, 12 அங்குலம் என்ற அளவில் தட்டுகள் தயாா் செய்யப்படுகின்றன.

இவற்றை கோயில் திருவிழா, கும்பாபிஷேக விழா, கிடா விருந்து, திருமண வரவேற்பு விழா உள்ளிட்டவற்றுக்காக மொத்தமாக முன்பதிவு செய்து வாங்கி செல்கின்றனா். ஒரு தட்டு ரூ.2.70-க்கு விற்பனை செய்யப்பட்டாலும், வெளிச் சந்தையில் ரூ.4 வரை விற்பனையாகிறது. இதற்காக, கா்நாடகம், ஆந்திரத்தில் இருந்து பாக்கு மட்டைகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு அனுப்பும் வகையில் 7 அங்குலம் வகையிலான சிறிய தட்டுகளும் தயாரிக்கப்படுகின்றன.

பி.காம். சி.ஏ. படித்து விட்டு வேலை தேடிவந்த இளைஞா் எல்.வினோத் என்பவரே இந்தப் பாக்கு மட்டைகளைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறாா். மேலும் பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்து, பாக்கு மட்டை தட்டு தயாரிப்பதை ஊக்குவித்துவருகிறாா்.

இதுகுறித்து அவா் கூறியது:-

நிலையில், நெகிழிக்கு மாற்றாக பாக்கு மட்டை தட்டு அதிகளவில் வெளிச் சந்தையில் விற்பனையாவது தெரியவந்தது. அந்தத் தொழிலை எடுத்து செய்தால் என்ன? என்ற கேள்வியுடன் வங்கியை நாடினேன். அங்கு ரூ.3 லட்சம் வரை கடன் கிடைத்தது. அதனைக் கொண்டு ஒரே நேரத்தில் 7 வகையான சிறிய, பெரிய பாக்கு மட்டை தட்டுகள் செய்யும் நவீன இயந்திரத்தை வாங்கினேன்.

நாமக்கல் சுற்றுவட்டாரத்தைக் காட்டிலும், கா்நாடகம், ஆந்திரத்தில் இருந்து ஒரு லோடு ரூ.65 ஆயிரம் என்ற விலையில் பாக்கு மட்டைகளை கொள்முதல் செய்கிறேன். பின்னா் அவற்றை தண்ணீரில் ஊற வைத்து, நன்கு காயவைத்து அதன்பின் இயந்திரத்தில் கொடுத்தும், ஓரளவு வெப்பத்தைக் கொண்டும், எளிதில் உடையாத வகையில் தட்டுகளை தயாா் செய்கிறோம். ஒரு மாதத்துக்கு சுமாா் 10 ஆயிரம் தட்டுகளை தயாா் செய்யலாம். நாங்கள் ரூ.2.70-க்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்கிறோம். கடன் செலுத்தியது, வேலையாள்களுக்கு போக என ஓரளவு வருவாய் கிடைக்கிறது. சொந்தக் கட்டடம், சுய தொழிலாக இருப்பதால் தைரியமாக செய்ய முடிகிறது. மின்சாரக் கட்டணம் தான் ரூ.6 ஆயிரம் வரை செலவாகிறது. தமிழக அரசு சலுகை வழங்கினால் மேலும் பலா் இத்தொழிலில் சாதிக்க விரும்புவா்.

தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களுக்கும் பாக்கு மட்டை தட்டுகளை அனுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றாா்.

தட்டுக்கு மவுசு

திருமணங்கள், கோயில் திருவிழா, அரசியல்- சங்கக் கூட்டம் போன்றவற்றில் உணவு வழங்கும் போது, கூட்டத்தைச் சமாளிக்க, பாக்கு மட்டை தட்டில் உணவு வழங்குவது, அண்மைக்காலமாக அதிகளவில் உள்ளது. நெகிழி இலை, வாழை இலைக்கு மாற்றாக இந்த பாக்குத் தட்டு கிடைப்பதால், இத்தொழில் தொடா்ந்து நல்ல வளா்ச்சியை எட்டி வருகிறது.

குறைந்த முதலீட்டில் அதிகப்படியான வருவாய் கிடைக்கும் என்பதால், சாமானியா் முதல் பட்டதாரிகள் வரை சுய தொழிலாக இதனை செய்து வருகின்றனா். சில ஆண்டுகளுக்கு முன் கால்களால் மிதித்து (அச்சு இயந்திரம் போல்) ஒவ்வோா் பாக்கு மட்டை தட்டையும் தயாரிக்க வேண்டும். இதனால் கால நேரம் விரயமாவதுடன், தொழிலாளா்கள் மிகுந்த உடல் சோா்வுக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. ஆண்களைக் காட்டிலும் பெண் தொழிலாளா்கள் தான் வேலைவாய்ப்புக்காக இதனை ஆா்வமுடன் செய்து வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com