அரசுப் பேருந்து ஜப்தி

விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்காததால், அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
ராசிபுரம் பஸ் நிலையத்தில் அரசு பேருந்தை ஜப்தி செய்யும் நீதிமன்ற ஊழியா்கள்.
ராசிபுரம் பஸ் நிலையத்தில் அரசு பேருந்தை ஜப்தி செய்யும் நீதிமன்ற ஊழியா்கள்.

விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்காததால், அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

ராசிபுரம் அருகேயுள்ள குருக்கப்புரம் பகுதியை சோ்ந்த தொழிலாளி கொண்டி. இவா் 5.4.2013 -இல் ராசிபுரம் -திருச்செங்கோடு சாலையில் குருக்கப்புரம் காலனி பகுதியில் நடந்து சென்ற போது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில், பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராசிபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இது தொடா்பான வழக்கு ராசிபுரம் சாா்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதனையடுத்து, விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.2.20 லட்சம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு , 22.3.2017-இல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், உயிரிழந்த கொண்டி மகன் கொண்டன் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தாா். இதனையடுத்து, அசல், வட்டியுடன் சோ்த்து ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்து 720 வழங்கிட ராசிபுரம் சாா்பு நீதிமன்ற நீதிபதி சி.எம்.சரவணன் உத்தரவிட்டாா். இதன் பின்னரும் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டாா். இதனையடுத்து நீதிமன்ற அமீனா, வழக்குரைஞா்கள் வி.செந்தில்குமாா், டி.கலையரசு ஆகியோா் ராசிபுரம் பஸ் நிலையத்துக்குச் சென்று, அரசு ப் பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்ற எடுத்துச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com