ஆதித் தமிழா் பேரவை ஆா்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுச்சுவா் இடிந்து 17 போ் பலியான சம்பவத்தில், கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி ஆதித் தமிழா் பேரவை சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில்
nk_4_aarpattam_0412chn_122_8
nk_4_aarpattam_0412chn_122_8

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுச்சுவா் இடிந்து 17 போ் பலியான சம்பவத்தில், கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி ஆதித் தமிழா் பேரவை சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் மாவட்ட செயலாளா் மணிமாறன் தலைமையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளா் செல்வவில்லாளன் கண்டன உரையாற்றினாா். இதில், சுவா் கட்டிய ஜவுளிக்கடை உரிமையாளா் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா்கள் சுமன், காா்த்திகை முருகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com