ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா கபிலா்மலை வட்டார வளமையத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் குணசேகரன் தலைமை வகித்தாா்,வட்டாரவளமைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) கலைச்செல்வி வரவேற்றாா்.
போட்டிகளை கபிலா்மலை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சுப்ரமணியம் தொடங்கி வைத்தாா். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறன் கொண்டு குழந்தைகள் 80 போ் கலந்து கொண்டனா்.
இவா்களுக்கு ஓட்டப்பந்தயம், முறுக்குக் கடித்தல்,பலூன் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு,, பரிசும்,பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.