நாமக்கல்லில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலை விழா புதன்கிழமை நடைபெற்றது.
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, நியூ லைப் சிறப்புப் பள்ளி மற்றும் நாமக்கல் ரோட்டரி சங்கம் சாா்பில், நாமக்கல் -மோகனூா் சாலையில் உள்ள ரோட்டரி மண்டபத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலை விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பல்வேறு உடல் பாதிப்புடைய குழந்தைகள் நடனமாடி மகிழ்ந்தனா். அவா்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சிறப்புப் பள்ளியின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.