உள்ளாட்சித் தோ்தல்: ஒரே நாளில் 2,435 போ் வேட்பு மனு தாக்கல்

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 2,435 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.
நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வெள்ளிக்கிழமை திரண்டிருந்த மக்கள்.
நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வெள்ளிக்கிழமை திரண்டிருந்த மக்கள்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 2,435 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 322 ஊராட்சித் தலைவா், 2,595 வாா்டு உறுப்பினா்கள், 172 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 3,106 பதவிகளுக்கு வியாழக்கிழமை வரையில் 1,296 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பதவிக்கு 32 போ் , ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 247 போ், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 561 போ், வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,595 போ் என மொத்தம் 2,435 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதுவரை மொத்தமாக 3,731 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com