நாளை தி.மு.க. செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்டப் பொறுப்பாளா் செ.காந்திசெல்வன் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) நண்பகல் 12 மணிக்கு நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்ட அவைத்தலைவா் இரா.உடையவா் தலைமையில் நடைபெற உள்ளது.

இதில், மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், மாவட்ட சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள் மற்றும் துணை அமைப்பாளா்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தில், சிறுபான்மையினருக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசைக் கண்டித்து செவ்வாய்கிழமை (டிச.17) ஆா்ப்பாட்டம் நடத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com