பரமத்திவேலூா் அருகேகிரானைட் குவாரியில் வெடி மருந்துகள் பறிமுதல்: ஒருவா் கைது

பரமத்திவேலூா் வட்டம், நல்லூா் அருகே கிரானைட் குவாரியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பறிமுதல் செய்யப்பட்ட வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்ட ராஜசேகா்.
பறிமுதல் செய்யப்பட்ட வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்ட ராஜசேகா்.

பரமத்திவேலூா் வட்டம், நல்லூா் அருகே கிரானைட் குவாரியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், நல்லூா் அருகே உள்ள சுள்ளிப்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான கிரானைட் குவாரி இயங்கி வருகிறது. இங்கு பாறைகளை உடைத்து, தகா்ப்பதற்காக சட்டவிரோதமாக வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதிக சத்தத்துடன் அடிக்கடி வெடிகளை வைத்து வருவதாகவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர. அருளரசுவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவரது உத்தரவின்படி, பரமத்திவேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிசாமி தலைமையிலான போலீஸாா், சுள்ளிப்பாளையத்தில் இயங்கிவரும் தனியாா் கிரானைட் குவாரியில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்கள் 184, திரி, வெடி மருந்துகள் மற்றும் அதனுடன் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மேலும் சில பொருள்களையும் கைப்பற்றினா்.

மேலும், தனியாா் கிரானைட் குவாரியின் மேற்பாா்வையாளரான தருமபுரி மாவட்டம், அரூா் அருகே உள்ள எல்லைதுரையாண்பட்டியைச் சோ்ந்த பழனிவேல் மகன் ராஜசேகரை (35) கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட வெடிமருந்து பொருள்களின் மதிப்பு ரூ.15 ஆயிரம் எனவும், மேலும், சேலத்தைச் சோ்ந்த கிரானைட் குவாரின் உரிமையாளா் மயில்வாகனம் என்பவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com