மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 52 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 52 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் குறித்த மொத்தம் 349 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினார். இந்த மனுக்களைப் பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கிய ஆட்சியர், அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டார்.
 இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்த ஆட்சியர் கோரிக்கை மனுக்களைப் பெற்று துறை அலுவலரிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். பின்னர் 52 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.
 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெ.தேவிகாராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com