வில்லிபாளையம்
பரமத்தி வேலூர் வட்டத்துக்குள்பட்ட வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சாதன பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (பிப்ரவரி 14) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியச் செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.
இதனால் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: வில்லிபாளையம்,ஜங்கமநாய்க்கன்பட்டி,சின்னமநாயக்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியாகவுண்டம்பளையம்,தம்மகாளிபாளையம்,பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், மாவுரெட்டி,ஓவியம்பாளையம்,தேவிபாளையம்,கீழகடை, கஜேந்திரநகர், சுண்டக்காளையம்.