பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதி முருகன் கோயில்களில் மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
மாசி கிருத்திகையை முன்னிட்டு கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பொத்தனூர் அருகே உள்ள பச்சைமலை முருகன் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், பரமத்தி வேலூர் சந்தைப் பகுதியில் உள்ள முருகன் கோயில், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோயில், சக்திநகர் பாலமுருகன் கோயில், நன்செய் இடையாறு திருவேலிஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன. இதில் அந்தந்த சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.