ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரிக்கை

எருமப்பட்டியில் பிப்ரவரி மாதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

எருமப்பட்டியில் பிப்ரவரி மாதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்: எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா கடந்த மே 26-ஆம் தேதி எந்தவித அசம்பாவிதமும் இன்றி, சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.
அதேபோல், நிகழாண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இதனால், வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com