இந்து முன்னணி சார்பில் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்செங்கோட்டில் அண்மையில் நடைபெற்றது.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ராமசாமி அம்மணியம்மாள் மண்டப உரிமையாளர் ராஜசேகர், எஸ்.ஆர்.கே. பேருந்து உரிமையாளர் பாலசுப்பிரமணியம், நாமக்கல் குற்றவியல் வழக்குரைஞர் சங்கத் தலைவர் ரா. அய்யாவு ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.
இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தவச்சலம், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், பரமேஸ்வரன், மாநில துணைத் தலைவர் பூசப்பன், ஜெயக்குமார், அரசு ராஜா, மாநிலச் செயலாளர்கள் அண்ணாதுரை, கிஷோர்குமார் மற்றும் மாநில, கோட்ட, மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சபரிமலையின் சட்டம் ஒழுங்கை கேரள அரசு காக்க தவறியதாக கேரள அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் இராம. கோபாலன் கலந்து கொண்டு இந்து முன்னணி அமைப்பின் வேலையை அதிகப்படியான கிராமங்களுக்கு விரிவுபடுத்துவதின் அவசியம் குறித்துப் பேசினார். தொடர்ந்து பெரிய தேர் அருகில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், திருச்செங்கோடு நகர பொதுச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.