குமாரபாளையம் ஸ்ரீபாலமுருகன் கோயிலில் 50-ஆம் ஆண்டு அறுபடை வீடு யாத்திரை மற்றும் அன்னாபிஷேக வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குமாரபாளையம் காவல் நிலையம் அருகில் உள்ள இக் கோயிலில் முருக பக்தர்கள் சார்பில் நடைபெற்ற இவ் விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் அன்னாபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை வழிபாடு நடத்தப்பட்டது.
விழாவில், அறுபடை வீடு புனித யாத்திரை முருக பக்தர்கள் சார்பில் சிறப்பு பஜனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.