ராசிபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ராசிபுரம் மெட்ரோ ஜே.சி.ஐ. அமைப்பு மற்றும் நம்ம போதமலை அறக்கட்டளை இணைந்து பிளாஸ்டிக் தவிர்ப்பு

ராசிபுரம் மெட்ரோ ஜே.சி.ஐ. அமைப்பு மற்றும் நம்ம போதமலை அறக்கட்டளை இணைந்து பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின. ஆர். புதுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
விழாவுக்கு நாமக்கல் மாவட்ட ஜேசிஐ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜே.சி. தேவா செங்கோட்டுவேலு தலைமை வகித்தார். ராசிபுரம் காவல் துறை உதவி ஆய்வாளர் தலைமையாசிரியர் ஜாய்சி அன்னம்மாள், ஆசிரியர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் காவல் துறை உதவி ஆய்வாளர்  டி.பூபதி கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விழாவில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் தவிர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து துணிப்பை மற்றும் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. ஜேசிஐ நிர்வாகிகள் பூபதி, நம்ம போதமலை அறக்கட்டளை பொருளாளர் வி.ஆனந்தன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com