பரமத்திவேலூர் ஏலச் சந்தையில்வாழைத்தார் விலை உயர்வு

பரமத்திவேலூர் வாழைத்தார் விற்பனை சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின்


பரமத்திவேலூர் வாழைத்தார் விற்பனை சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம்,நன்செய் இடையாறு,பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 600 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 250 வரையிலும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 300-க்கும்,பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ. 300-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 6-க்கு விற்பனையானது. சனிக்கிழமை 2,500 வாழைத்தார்கள் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
அதில் அதிகபட்சமாக பூவன் வாழைத்தார் ரூ.600-க்கும், ரஸ்தாலி ரூ.450-க்கும், பச்சைநாடன் ரூ.400-க்கும், கற்பூரவள்ளி ரூ.450-க்கும் விற்பனையானது.
மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.9-க்கு விற்பனையானது. தைப்பூச கொடியேற்றத்தை முன்னிட்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com