பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன.
மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு சனிக்கிழமை காலை பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. அதேபோல கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், பொத்தனூர் பச்சைமலை முருகன், வேல் வடிவம் கொண்ட அனிச்சம்பாளையம் சுப்பிரமணியர், பாலப்பட்டி கதிர்காமத்து கதிர்மலை முருகன், பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோயிலில் உள்ள சுப்பிரமணியர், பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகப்பெருமான் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.