திருவள்ளுவர் மன்றம் சார்பில், திருவள்ளுவர் தினம் மோகனூரில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
மன்றத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலர் கண்ணன், பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பொருளாளர் சுரேஷ்ராஜ், உறுப்பினர்கள் சிவசண்முகம், வழக்குரைஞர் மாதேஸ்வரன், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொல்லிமலை செங்காட்டுப்பட்டி கிராமத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில், திருவள்ளுவர் 2050-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கூட்டமைப்பு மாவட்டச் செயலர் செந்தில்முருகன் தலைமை வகித்தார்.
ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மு.ஆ.உதயகுமார் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. திருக்குறள் ராசா, ஆசிரியர் கார்த்திகேயன், சத்தியநாராயணன், ஓய்வுபெற்ற ஆசிரியர் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.