தூசூரில் மகளிர் வாலிபால் போட்டி

நாமக்கல் அருகே தூசூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான பெண்கள் வாலிபால்

நாமக்கல் அருகே தூசூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. தூசூர் இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெறும் இந்த போட்டியை நாமக்கல் சக்தி கல்வி, கலாசார அறக்கட்டளை நிறுவனர் என்.கே.எஸ்.சக்திவேல் தொடக்கி வைத்தார்.
இதில் சென்னை டாக்டர் சிவந்தி கிளப் அணி, நெல்லை பிரண்ட்ஸ் அணி, பொள்ளாச்சி புளு ஸ்டார் அணி, கோவை பி.எஸ்.ஜி.ஆர். அணி, சென்னை குயின்மேரீஸ் அணி, ஒசூர் தொன்போஸ்கோ அணி என 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 
சூப்பர் லீக் அடிப்படையில் நடத்தப்படும் இந்த போட்டியில், முதல் பரிசை பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரம், 2-ஆவது பரிசை பெறும் அணிக்கு ரூ.10 ஆயிரம், 3-ஆவது பரிசை பெறும் அணிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு கைப்பந்துக் கழக பொதுச் செயலர் சித்தர பாண்டியன் பரிசுகளை வழங்க உள்ளார். இதில் நாமக்கல் மாவட்ட கைப்பந்து சங்க பொருளாளர் அருணகிரி, செயலர் சதாசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com