குறைதீர் கூட்டத்தில் ரூ.19.17 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், ரூ.19 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் திங்கள்கிழமை வழங்கினார்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், ரூ.19 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் திங்கள்கிழமை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்றுவாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 527 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். 
தொடர்ந்து, ராசிபுரம் வட்டம், மூலப்பள்ளிப்பட்டி கிராமம், புதுக்காலனியைச் சேர்ந்த வன்னியரசன் மகன் மனோ மின்சாரம் தாக்கி உயிரிழந்ததையொட்டி, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையினையும், பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தீ விபத்து மற்றும் மழையினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4  லட்சம் வீதம் ரூ.16 லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.8,846 வீதம் ரூ.17,692 மதிப்பிலான தையல் இயந்திரங்களை வழங்கினார். அதன்பின், மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை அவர் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் மு.துரை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com