பட்டறைமேடு ஹைட்ராலிக் பட்டறையில் மின் வயரை காலில் மிதித்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
திருச்செங்கோடு எட்டிமடைபுதூரைச் சேர்ந்தவர் மதியழகன் (36). இவர் சங்ககிரி ரோடு பட்டறை மேட்டில் உள்ள ஒரு ஹைட்ராலிக் பட்டறையில் வேலை செய்து வந்தார். இரவு மழை பெய்து கொண்டிருந்த போது, கழிப்பறைக்குச் சென்ற அவர், வெறுங்காலுடன் நடந்து வந்து தரையில் கிடந்த மின்கம்பியை மிதித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மின்சாரம் உடலில் பாய்ந்து கீழே விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து திருச்செங்கோடு நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மதியழகனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மதியழகனுக்கு பானுமதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.