ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். இதில், 2019-20-க்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடியில் நியமனம் செய்யப்பட்ட இளநிலை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளான ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com