நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஜூலை 16-ஆம் தேதி குருபூர்ணிமா விழா நடைபெறுகிறது.
கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டியில் எழுந்தருளியுள்ள சாய் தபோவனத்தில் சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றம் சார்பில் குருபூர்ணிமா விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சாயி சத்ய விரத பூஜை நடைபெறுகிறது.10 மணிக்கு மேல் சாயி சத்சரித பாராயணமும், கூட்டுப் பிராத்தனை,ஆரத்தி,சாயி நாம ஜெபமும்,சிறப்பு அலங்கார ஆராதனைகளும் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை சாய் தபோவன சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.