திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு பாரதிய ஜனதா கட்சியைக் கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடகம் மற்றும் கோவாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியைக் கலைக்க பாஜக முயற்சிப்பதாக புகார் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தனகோபால் தலைமை வகித்தார்.திருச்செங்கோடு நகரத் தலைவர் சர்வேயர் செல்வகுமார் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.