ராசிபுரம் வள்ளலார் கோயில் மகாசபை குழுவுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கோயில் மகாசபையின் தலைவராக கே.எம்.நடேசன், செயலாளராக ரா.ரெங்கதாசரி, பொருளாளராக கே.எ.மணியரசு, துணைத் தலைவராக என்.பழனிசாமி, துணைச் செயலாளராக ரா.கேசவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு நிர்வாகக் குழுவில் இருப்பர்.