முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
பா.ம.க. பொதுக் கூட்டம்
By DIN | Published On : 30th July 2019 09:32 AM | Last Updated : 30th July 2019 09:32 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்ட பா.ம.க. சார்பில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முத்து விழா சிறப்பு பொதுக் கூட்டம் நாமக்கல் பூங்கா சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநில துணைத் தலைவர் வடிவேலன் வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலர் பொன்.ரமேஷ் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலர் காளியப்பகவுண்டர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை அமைப்புச் செயலர் எம்.பி.எஸ்.ராஜேந்திரன் பங்கேற்று பேசினார். இந்த பொதுக் கூட்டத்தில், பா.ம.க. கடந்து வந்த பாதை, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் நடத்திய போராட்டங்கள், வன்னியர் சங்கமாக இருந்து கட்சியாக வளர்ந்து செய்த சாதனைகள் குறித்து நிர்வாகிகள் பேசினர்.
இதில், கிழக்கு, மேற்கு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.