சோழசிராமணி
பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு காரணமாக வியாழக்கிழமை (ஜூன் 13) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: சோழசிராமணி, சுள்ளிபாளையம், சக்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு.