நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.


நாமக்கல், ஜூன் 13:  கோவை நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக,  கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  கோயம்புத்தூர் மாவட்ட சிவில் நீதிமன்றங்களில்  காலியாகவுள்ள 11 நகல் பரிசோதகர் மற்றும் நகல் படிப்பவர், 16 முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்,  21 அலுவலக உதவியாளர், 16  காவலர்,  இரவுக் காவலர், 4 துப்புரவுப் பணியாளர், 5 பெருக்குபவர் மற்றும் 10  மசால்சி பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மேலும்,  இப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள், கோயம்புத்தூர் மாவட்ட  முதன்மை நீதிமன்றத்தின் இணையதளமான ‌d‌i‌s‌t‌r‌i​c‌t‌s.‌e​c‌o‌u‌r‌t‌s.‌g‌o‌v.‌i‌n/​C‌o‌i‌m​b​a‌t‌o‌r‌e-இல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 28-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com