நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
நாமக்கல், ஜூன் 13: கோவை நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோயம்புத்தூர் மாவட்ட சிவில் நீதிமன்றங்களில் காலியாகவுள்ள 11 நகல் பரிசோதகர் மற்றும் நகல் படிப்பவர், 16 முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், 21 அலுவலக உதவியாளர், 16 காவலர், இரவுக் காவலர், 4 துப்புரவுப் பணியாளர், 5 பெருக்குபவர் மற்றும் 10 மசால்சி பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும், இப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள், கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் இணையதளமான districts.ecourts.gov.in/Coimbatore-இல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 28-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.