அஞ்சலக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மாத ஊதியம், ஓய்வூதியம் கிடைப்பதில் தொடர்ந்து ஏற்படும் கால தாமதத்தைக் கண்டித்து, அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாத ஊதியம், ஓய்வூதியம் கிடைப்பதில் தொடர்ந்து ஏற்படும் கால தாமதத்தைக் கண்டித்து, அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் தலைமை அஞ்சலகம் முன்பு செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு,  மாவட்டச் செயலர் பி.கே.ராமசாமி தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் வெங்கடேசன், செயலர் துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
மாத இறுதி நாளன்று ஊதியமும்,  ஓய்வூதியமும் கிடைக்கும் வகையில்,  காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com