அரசுப் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்

மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 

மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
இந்திய மருத்துவம்- ஹோமியோபதி துறை, யோகா- இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, மாணிக்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன இணைந்து விழாவை நடத்தின.
விழாவில், மாணவ, மாணவியருக்கு யோகா பயிற்சியை திருச்செங்கோடு அரசு மருத்துவமனை யோகா, இயற்கை மருத்துவர் த. வெங்கடேசன் அளித்தார். ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் ந.அமுதலட்சுமி, சுகாதார ஆய்வாளர் கு. ரா. சரவணமூர்த்தி,  மருந்தாளுநர் தி. குணசேகரன், தலைமை ஆசிரியர் மா. பார்த்தீபன், ஆசிரியர்கள்  மீ. விஜயலட்சுமி, ஆ. இராமு, இல. ராஜ்குமார் மா. சுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com