தேசிய மாணவர் பாதுகாப்புப் படை (என்.சி.சி. ) அலுவலகத்தில் காலியாக உள்ள 5 பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும்
கூறியிருப்பதாவது;
என்.சி.சி. அலுவலகத்தில் ஸ்டோர் உதவியாளர் 3 பணியிடமும், சௌகிதார் இரு பணியிடமும் காலியாகவுள்ளன. எஸ்.டி., எஸ்.சி., பி.சி., எம்.பி.சி என்ற இன சுழற்சி அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றந. இதற்கான விண்ணப்பங்களை, சென்னை பூங்கா நகரில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள என்.சி.சி. மருத்துவப் பிரிவு முகவரிக்கு ஜூலை 5-ஆம் தேதிக்குள்அனுப்பி வைக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in/departmnent/34 என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆட்சியர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், "நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள், படைப்பணியில் அலுவலராக நியமனம் பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு என்ற http://exweletutor.com இணையதளம் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சியில் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெறலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.